கோப்புப்படம் 
இந்தியா

நாடு முழுவதும் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடி: 50 பேர் கைது

நாடு முழுவதும் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாகக் கூறி பல்வேறு நகரங்களில் மோசடியில் ஈடுபட்ட 50 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

DIN


புதுதில்லி: நாடு முழுவதும் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாகக் கூறி பல்வேறு நகரங்களில் மோசடியில் ஈடுபட்ட 50 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் அருண்குமார் தெரிவித்ததாவது: 
நாடு முழுவதும் ரேக் மாங்கோ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி பிட்காய்ன்ஸ் மூலம் கட்டணத்தை பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ததாக மேற்குவங்கத்தைச் சேர்ந்த 5 முக்கிய குற்றவாளிகள் உள்பட 50 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆன்லைனில் சட்டவிரோத ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடியில் ஈடுபட்ட கும்பலை ரயில்வே பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை முறியடித்துள்ளனர். 

"மோசடி கும்பலின் நெட்வொர்க் கண்டுபிடிக்கப்பட்டு அதன் அமைப்பு அழிக்கப்பட்டு 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தேசிய அளவிலான நடவடிக்கையாகும். அவர்கள் ரேக் மாங்கோ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி பிட்காய்ன்ஸ் மூலம் கட்டணத்தை பெற்றுள்ளனர், இதனால் அவர்களின் பணப் பரிமாறறத்தை கண்டுபிடிக்க முடியவில்லை" என்று குமார் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்து தெரியுமா?

கோடீஸ்வரர் ஆனாரா மிடில் கிளாஸ்? - திரை விமர்சனம்

DINAMANI வார ராசிபலன்! | Nov 23 முதல் 29 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

நவ. 23-ல் திருமணம்..! விடியோ வெளியிட்டு உறுதிசெய்த ஸ்மிருதி மந்தனா.!

SCROLL FOR NEXT