ஒரு நாள் கரோனா பாதிப்பு: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மட்டும் 61% நோயாளிகள்
நாடு முழுவதும் ஒரு நாள் கரோனா பாதிப்பில் தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் மட்டும் 61 சதவீத நோயாளிகள் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரு நாள் கரோனா பாதிப்பில் தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் மட்டும் 61 சதவீத நோயாளிகள் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 89,706 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், உத்தரப்பிரதேசம், தமிழகம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் 61 சதவீத நோயாளிகள் உள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது கரோனா பாதித்து 8,97,394 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் மகாராஷ்டிரத்தில் மட்டும் 2,40,000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அதுபோலவே நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 1,115 பேர் பலியாகியுள்ளனர். இதில் மகாராஷ்டிரத்தில் மட்டும் 380 பேரும், கர்நாடகத்தில் 146 பேரும், தமிழகத்தில் 87 பேரும் பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.