கேரளத்தில் இன்று ஒரே நாளில் 4,696 பேருக்கு கரோனா;16 பேர் பலி
கேரளத்தில் இன்று ஒரே நாளில் 4,696 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்று ஒரே நாளில் 4,696 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் ஆரம்ப கட்டத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா வைரஸ், வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்தவர்களால் தற்போது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலில், இன்று ஒரே நாளில் 4, 696 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதனால் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,35,721 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் தற்போது 39 ஆயிரத்து 415 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 2,751 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 95,702 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
இன்று ஒரே நாளில் 16 பலியாகியுள்ளனர். இதையடுத்து கரோனா தாக்குதலுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 535ஆக உயர்ந்துள்ளது.