முகப்பு
இந்தியா

மன்னிப்புக் கேட்க மாட்டேன்: பிரசாந்த் பூஷண்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை ஏற்கத் தயார் என்றும், கருத்துக்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்றும் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
மன்னிப்பு கேட்க மாட்டேன்: பிரசாந்த் பூஷண்
பகிர்:

புது தில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை ஏற்கத் தயார் என்றும், கருத்துக்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்றும் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளின் செயல்பாட்டை சுட்டுரையில் விமரிசித்திருந்த பிரசாந்த் பூஷன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

வழக்குரைஞரும், சமூக ஆா்வலருமான பிரசாந்த் பூஷண் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளின் வாயிலாக நீதித்துறையை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அவா் மீதான குற்றத்தை உச்சநீதிமன்றம் கடந்த 14-ஆம் தேதி உறுதி செய்தது. அவருக்கான தண்டனை விவரங்களை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிடுகிறது.

தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று கூடியது. அப்போது, தண்டனை விவரங்கள் குறித்து இரு தரப்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இறுதியாக, பிரசாந்த் பூஷண் தரப்பில் வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டன. 

அதில், எனது நிலைப்பாட்டில் மிகத் தெளிவாக இருக்கிறேன். நீதிபதிகள் குறித்து சுட்டுரையில் பதிவிட்ட இரண்டு பதிவுகளுக்காகவும் நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன், எனது கருத்தில் தற்போதும் உறுதியாக இருக்கிறேன்.  நான் எனது அடிப்படை கடமையை செய்ததாகவேக் கருதுகிறேன். நான் செய்தது தவறு என்று உச்ச நீதிமன்றம் கருதுமானால், அதற்காக எனக்கு அளிக்கும் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்கிறேன் என்று பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →