முகப்பு
இந்தியா

பேரவைத் தலைவர் நோட்டீஸ்: பைலட் தரப்பின் திருத்தம் செய்யப்பட்ட மனு மீது மாலை விசாரணை

சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது தொடர்பாக ராஜஸ்தான் பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிரான பைலட் தரப்பின் திருத்தம் செய்யப்பட்ட மனு, இன்று மாலை விசாரிக்கப்படவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
கோப்புப்படம்
பகிர்:


சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது தொடர்பாக ராஜஸ்தான் பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிரான பைலட் தரப்பின் திருத்தம் செய்யப்பட்ட மனு, இன்று மாலை விசாரிக்கப்படவுள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில், தகுதி நீக்கம் செய்யப்படுவது தொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என சச்சின் பைலட் உள்பட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு மாநில பேரவைத் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பினார்.

பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிராக பைலட் தரப்பு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பைலட் தரப்பு சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே, மனுதாரர்கள் மனுவில் திருத்தம் செய்ய விரும்புவதால், அவகாசம் கோரி வாதாடினார். இதற்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.

மாலை 5 மணிக்கு இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இதை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பைலட் தரப்பின் திருத்தம் செய்யப்பட்ட மனு இன்று மாலை 7.30 மணியளவில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →