முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா தொற்று

​கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:47 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்ததாவது:

"கேரளத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,342 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 85 பேரில் 53 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 18 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 10 பேர் கேரளத்தில் உள்ளவர்கள். 4 பேர் மருத்துவ ஊழியர்கள்.

இன்றைய நிலவரப்படி 1,045 பேர் குணமடைந்துள்ளனர். வீடுகளிலும், கண்காணிப்பு மையங்களிலும் 2,35,418 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 1,989 பேர் மருத்துவமனையில் உள்ளனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.