முகப்பு
இந்தியா

தெலங்கானா சட்டப்பேரவையில் ஆளுநர் தமிழிசை சொன்ன திருக்குறள்

தெலங்கானா சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்றுத் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை திருக்குறள் ஒன்றைச் சொல்லி தனது உரையைத் தொடங்கினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
தமிழிசை சவுந்தரராஜன்
பகிர்:

ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்றுத் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை திருக்குறள் ஒன்றைச் சொல்லி தனது உரையைத் தொடங்கினார்.

தெலங்கானா சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது ஆளுநர் தமிழிசை தனது உரையை உறு பசியும் என்று தொடங்கும் திருக்குறளைச் சொல்லி அதற்கு ஆங்கிலத்தில் விளக்கமும் அளித்தார்.

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை, அந்த மாநிலத்தின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அவைத் தலைவர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Advertisement

வணக்கம் என தமிழில் உரையைத் தொடங்கிய தமிழிசை, தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உரையாற்றினார். இடையே, 

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு 


என்ற திருக்குறளைச் சொல்லி, அதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளித்தார். அதாவது, ஒரு நாடு என்பது மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வரும் பகை ஆகியவை இல்லாமல் இருப்பது என்பதே அந்த திருக்குறளுக்கான பொருளாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments