முகப்பு
இந்தியா

தில்லியில் 4-வது நாளாக தொடர் மழை

தில்லியின் பல்வேறு நகரங்களில்  நான்காவது நாளாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

Updated On : 6 ஜனவரி 2021, 12:19 pm IST
தில்லியில் 4-வது நாளாக தொடர் மழை
பகிர்:

தில்லியின் பல்வேறு நகரங்களில்  நான்காவது நாளாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை அவ்வபோது பெய்து வருகிறது.

தென்மேற்கு தில்லி, வடகிழக்கு தில்லி, மத்திய தில்லி, மானேசர், குருகிராம், பானிபட், ஃபருக் நகர், ஃபரிதாபாத் ஆகிய பகுதிகளில் காலை முதல் மழை பெய்தது. இதனால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Advertisement

அதிகபட்சமாக சப்தர்ஜங் பகுதியில் 4.77 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஏற்கனவே தில்லியில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், தற்போது மழையும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தில்லி எல்லைகளில் உள்ள சாலைகளில் கூடாரங்களை அமைத்து போராடி வரும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.