பெற்றோர் திட்டியதால் கட்டடத்தில் இருந்து குதித்த சிறுவன் பலி
கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கட்டடத்திலிருந்து குதித்து 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
நொய்டா: எப்போதும் செல்லிடப்பேசியில் விளையாடிக் கொண்டிருப்பதை பெற்றோர் கண்டித்ததால், கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கட்டடத்திலிருந்து குதித்து 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
செல்லிடப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்த நிலையில், நேற்று இரவு முதல் 7வது வகுப்பு மாணவனைக் காணவில்லை என்று பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
நேற்று இரவு முழுவதும் மாணவனை காவல்துறையினரும் பெற்றோரும் தேடி வந்த நிலையில், அப்பகுதியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தின் அருகில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அந்த கட்டடத்திலிருந்து குதித்து சிறுவன் தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.