முகப்பு
இந்தியா

தில்லியில் மேலும் 3567 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,567 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
தில்லியில் மேலும் 3567 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,567 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 3,567 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,72,381-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், புதிதாக 2,904 பேர் குணமடைந்ததால், இதுவரை  மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 6,48,674-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 10 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,060-ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் 12,647 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →