முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 5,506 பேருக்கு கரோனா

​தில்லியில் புதிதாக 5,506 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் புதிதாக 5,506 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,90,568 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,363 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 6,59,980 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 11,133 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

இன்றைய நிலவரப்படி 19,455 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 90,201 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 6.10 சதவிகிதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments