இந்தியா

உ.பி.யில் சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 5 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலத்தின், பிஜ்னோர் மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நால்வர் படுகாயமடைந்தனர். 

IANS

உத்தரப் பிரதேச மாநிலத்தின், பிஜ்னோர் மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நால்வர் படுகாயமடைந்தனர். 

இந்த சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் பக்ஷிவாலா பகுதியில் யூசுப் என்பவரின் வீட்டில் நடைபெற்றது. அவர் வீட்டில் பட்டாசு பிரிவு ஒன்றை நடத்தி வந்தார்.

மிகவும் சக்திவாய்ந்த வெடிவிபத்து என்பதால், வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்ததால், ஐந்து தொழிலாளர்கள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

வீட்டில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிபொருட்களே விபத்துக்குக் காரணமாக இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த 4 பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூத்த காவல்துறை மற்றும் சிவில் அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலை நடத்திவந்த யூசுப்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்! பஞ்சாபின் 3 எம்பிக்கள் புறக்கணிப்பு!

செங்கோட்டையன் பதவி பறிப்பு: இபிஎஸ்ஸின் கோவை பிரசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

குடியரசு துணைத் தலைவர் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கியது! முதலில் வாக்களித்த மோடி!

அதிமுக கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு

தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு: 81 ஆயிரத்தைக் கடந்தது!

SCROLL FOR NEXT