முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

Updated On : 9 ஏப்ரல், 2021 at 1:22 PM
ஜம்மு-காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரும் கூட்டாக இணைந்து அப்பகுதியைச் சுற்றி வளைத்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் வியாழக்கிழமை மாலை மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பிறகு வெள்ளிக்கிழமை காலை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மேலும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

Advertisement

மேலும், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.