இந்தியா

ஆந்திரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

DIN

ஆந்திரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள மதுரவாடாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பங்காருநாயுடு (50). இவரது பிளாட்டில் நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
தகவலின் பேரில் காவல்துறையினர், தீயணைப்புதுறையினருடம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். ஆனால் பங்காருநாயுடு உள்பட 4 பேரும் உடல் கருகிய நிலையில் இறந்திருந்தனர். இதையடுத்து அவர்களின் சடலங்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் பங்காருநாயுடு பஹ்ரைனில் இருந்து தனது குடும்பத்தினருடன் விசாகப்பட்டினத்தில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT