ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தனக்கான 2ஆவது தவணை கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை செலுத்திக் கொண்டார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை ராஜஸ்தான் மாநில ஆளுநரான கல்ராஜ் மிஸ்ரா தனது 2ஆவது தவணை கரோனா தடுப்பூசியை ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார்.
கடந்த மார்ச் 1ஆம் தேதி கல்ராஜ் மிஸ்ரா முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.