இந்தியா

உத்தரகண்ட்டில் பகுதிநேரப் பொதுமுடக்கத்திற்கான கால அளவு நீட்டிப்பு

DIN

உத்தரக்கண்ட் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட இரவுநேரப் பொதுமுடக்கத்திற்கான கால அளவை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் உயர்ந்து வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் பகுதிநேரப் பொதுமுடக்கத்தை விதித்து செயல்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள இரவுநேரப் பொதுமுடக்கத்திற்கான கால அளவை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி இரவு 9 மணிக்கு அமலாகும் பொதுமுடக்கம் தற்போது 7 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற்பகல் 2 மணி முதல் நகர்ப்புற சந்தைகளை மூடவும் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் இதுவரை 1,34,012 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT