இந்தியா

2-வது முறை கரோனா: குணமடைந்தார் எடியூரப்பா

DIN

கர்நாடக முதல்வர் எடியூரப்பா 2-வது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஏப்.22) அவர் குணமடைந்து வீடு திரும்பினார். 

முதல்வர் எடியூரப்பா கடந்த 18-ம் தேதி இரண்டாவது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனிடையே இன்று அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

கடந்த மார்ச் 12-ஆம் தேதி விக்டோரியா மருத்துவமனையில் முதல்வா் எடியூரப்பா கோவேக்ஸின் முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார். இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT