மனைவிக்கு கரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட ராஜஸ்தான் முதல்வர்
மனைவிக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
மனைவிக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ள அவர்,
எனது மனைவி சுனிதா கெலாட்டுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து வீட்டு தனிமையில் உள்ள அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என பதிவிட்டுள்ளார்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் வீட்டில் இருந்தபடி அரசு அலுவல் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.