இந்தியா

‘யார் எதிர்த்தாலும் மேக்கேதாட்டு அணை கட்டுவோம்’: கர்நாடக முதல்வர்

DIN

யார் எதிர்த்தாலும் எங்களுக்கு கவலையில்லை, விரைவில் மேக்கேதாட்டு அணை கட்டுவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களாக தமிழக - கர்நாடக அரசுகளுக்கு இடையே மேக்கேதாட்டு பிரச்னை தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடகத்தை ஆளும் பாஜகவிற்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சாவூரில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் கூறியதாவது,

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக எதிர்த்து வருகிறார்கள். யார் எதிர்த்தாலும் அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. விரைவில் உரிய ஆவணங்களுடன் அனுமதி பெற்று மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம். அணை கட்டுவதில் எந்த மாற்றமும் இல்லை, யார் போராடினாலும் பரவாயில்லை எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT