காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பில் இருந்த வீரர்கள் மீது நேற்று (வியாழக்கிழமை) அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பில் இருந்த வீரர்கள் மீது நேற்று (வியாழக்கிழமை) அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. இந்நிலையில் அங்கு காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் இணைந்து நடத்திய தேடுதலில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து தாக்குதல் நடத்தினர்.
இதையும் படிக்க | காஷ்மீர் : பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்
இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் , பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இருவர் லேசான காயங்கள் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டதோடு சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி லக்சர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவன் என்றும் காஷ்மீர் மாநில காவல்துறை தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.
தீவிரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களைப் பற்றிய தகவல் வெளியாகவில்லை.