இந்தியா

ராஜஸ்தான்: இரண்டு லாரிகள் நேருக்குநேர் மோதி எரிந்ததில் 4 பேர் பலி

ராஜஸ்தானின் அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இரு வாகனங்கள் மோதி தீப்பற்றி இருந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

DIN

ராஜஸ்தானின் அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இரு வாகனங்கள் மோதி தீப்பற்றி இருந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தேசிய நெடுஞ்சாலை (NH8)இல் செவ்வாய்க்கிழமை அதிகாலை எதிரெதிரே வந்த இரண்டு லாரிகள் மோதிக்கொண்டன. இதில், இரண்டு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன. 

பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

இரண்டு லாரிகளும் டிவைடரைக் கடக்கும்போது இரண்டும் ஒன்றோடொன்று மோதி தீப்பற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இரண்டு லாரிகளிலும் மொத்தம் ஐந்து பேர் இருந்த நிலையில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஆதர்ஷ் நகரின் துணை ஆய்வாளர் கன்ஹையா லால் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT