உ.பி.யில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23-இல் பள்ளிகள் திறப்பு
உத்தரப் பிரதேசத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.
உத்தரப் பிரதேசத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.
அங்கு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் ஏற்கெனவே பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்தது:
"ஆகஸ்ட் 23 முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன."
உத்தரப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 27 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 420 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.