முகப்பு
இந்தியா

காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடைபெற்று வந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதியும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழப்பு.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை
பகிர்:

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடைபெற்று வந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதியும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழப்பு.

இன்று காலை முதல்  நடைபெற்று வரும்  தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரை தீவிரவாதிகள் சசுட்டனர். பலத்த காயத்துடன்  மருவத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர்  உயிரிழந்தார் .

பின் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையும் தனமண்டி வனச்சரக பகுதியில்  தீவிர தேடுலில் ஈடுபட்ட போது தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

இதனை எதிர் பார்க்காத தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலைத் தொடர்ந்தனர். சில நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும் தாக்குதல்கள் மேலும் தொடர்ந்து நடைபெறும் எனவும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷீமா நபி கஸ்பா தெரிவித்திருக்கிறார்.

இது இந்த மாதத்தில் தனமண்டி பகுதியில் இரண்டாம் முறையாக  நடைபெறும்  தாக்குதல் ஆகும் . முன்னதாக ஆக - 6 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →