முகப்பு
இந்தியா

தேர்தல் வியூகம்: பஞ்சாப் முதல்வருடன் சித்து சந்திப்பு

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Updated On : 20 ஆகஸ்ட், 2021 at 12:13 PM
பஞ்சாப் முதல்வருடன் சித்து சந்திப்பு
பகிர்:

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கடந்த காலங்களில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் அமரீந்தர் - சித்து இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், கட்சியின் மேலிடம் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் இருவரிடமும் சமரசம் நிலவி வருகிறது.

இந்நிலையில், 2022இல் நடைபெறவுள்ள பஞ்சாப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியின் மூத்த தலைவரும் முதல்வருமான அமரீந்தர் சிங்கை சந்தித்து சித்து இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

Advertisement

இந்த சந்திப்பின் போது, ஆளும் கட்சிக்கும் மாநில அரசுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காகவும், பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் சீர்திருத்த முயற்சிகளை விரைந்து செயல்படுத்தவும் 10 பேர் கொண்ட   கொள்கைக் குழு அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.