இந்தியா

காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை

DIN

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாம்பூர் பகுதியில் இன்று  (வெள்ளிக்கிழமை) பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே காஷ்மீரின் சில பகுதிகளில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. நேற்று(ஆக-19) தனமண்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு தீவிரவாதியும் ராணுவ அதிகாரியும் பலியானார்கள்.

இந்நிலையில் புல்வாமாவில் தேடுதலில் இருந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 

இதில் அடையாளம் தெரியாத தீவிரவாதி உயிரிழந்ததாக பாதுகாப்புப் படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT