‘இதுவரை 59.47 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு
நாட்டில் இதுவரை 59.47 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 59.47 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 59.47 கோடிக்கும் அதிகமானோருக்கு (59,47,65,7513) கரோனா தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி, முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் மேலும் 1,259 பேருக்கு கரோனா தொற்று
இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 54 லட்சத்திற்கும் அதிகமான (54,67,5516) தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
18-44 வயது பிரிவில் இதுவரை 22,33,59,860 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 2,11,37,082 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் இன்று பெற்றனர்.
இதையும் படிக்க | தமிழ்நாட்டில் மேலும் 1,585 பேருக்கு கரோனா தொற்று
நாட்டில் இதுவரை மொத்தம் 46,02,10,778 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 1,34,55,49,738 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.