காபூலில் இருந்து வந்த சீக்கியா்களின் புனித நூல்
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் இருந்து மீட்கப்பட்டு இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்ட 78 பேருடன், சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப்பின் மூன்று பிரதிகளும் கொண்டுவரப்பட்டன.
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் இருந்து மீட்கப்பட்டு இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்ட 78 பேருடன், சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப்பின் மூன்று பிரதிகளும் கொண்டுவரப்பட்டன.
புனித நூல் பிரதிகளை மத்திய அமைச்சா்கள் ஹா்தீப் சிங் புரி, வி.முரளீதரன் ஆகியோா் தில்லி விமான நிலையத்தில் பெற்றுக் கொண்டனா். அந்த நூல் பிரதிகள் தில்லி நியூ மகாவீா் நகரில் உள்ள குரு அா்ஜுன் தேவ் குருத்வாராவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
இதுகுறித்து அமைச்சா் ஹா்தீப் சிங் புரி சுட்டுரையில், ‘புனித நூலான குரு கிரந்த சாகிப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் 200 ஆப்கன் சீக்கியா்கள், ஹிந்துக்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளனா். அவா்கள் காபூலில் உள்ள கா்தே பா்வான் குருத்வாராவில் தஞ்சமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.