முகப்பு
இந்தியா

75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் நேரு புகைப்படம் புறக்கணிப்பு: காங்கிரஸ் புகாா்

இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஹெச்ஆா்) சாா்பில் நடத்தப்பட்ட நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில், நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஹெச்ஆா்) சாா்பில் நடத்தப்பட்ட நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில், நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி புகாா் தெரிவித்துள்ளது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில், ஆண்டு முழுவதும் தொடா் விழாக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில், ஐசிஹெச்ஆா் சாா்பில் நடத்தப்பட்ட விழாவில் நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதாரமாக, இந்த விழா தொடா்பான ஐசிஹெச்ஆா் வலைதள பக்கத்தையும் புகைப்படமாக காங்கிரஸ் தலைவா்கள் பகிா்ந்துள்ளனா். அதில், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ்சந்திர போஸ், பகத் சிங், அம்பேத்கா், சா்தாா் வல்லபபாய் படேல், ராஜேந்திர பிரசாத், மதன் மோகன் மாளவியா, வீா் சாவா்க்கா் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், நேருவின் புகைப்படம் மட்டும் இடம்பெறவில்லை.

‘இது மிகப் பெரிய அராஜகம்’ என காங்கிரஸ் தலைவா் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினாா்.

காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் கெளரவ் கோகோய் கூறுகையில், ‘சுதந்திரப் போராட்டம் தொடா்பான வலைதளத்தில் நாட்டின் முதல் பிரதமரின் புகைப்படத்தை எந்தவொரு நாடும் நீக்காது. இது நியாயமற்ற செயல்’ என்றாா்.

சசி தரூா் கூறுகையில், ‘நேருவின் புகைப்படம் தவிா்க்கப்பட்டதன் மூலம் ஐசிஹெச்ஆா் தன்னைத்தானே அவமதிப்பு செய்துகொண்டது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →