முகப்பு
இந்தியா

இந்தியாவில் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: கா்நாடகத்தில் கண்டறியப்பட்டது

அதிவேகமாகப் பரவும் உருமாறிய கரோனா தீநுண்மியான ஒமைக்ரான், முதல் முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

அதிவேகமாகப் பரவும் உருமாறிய கரோனா தீநுண்மியான ஒமைக்ரான், முதல் முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் இருவா் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

தென் ஆப்பிரிக்காவில் நவ. 24-ஆம் தேதி முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தீநுண்மியை கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே 29 நாடுகளில் 373 பேருக்கு பரவி உள்ள ஒமைக்ரான் தீநுண்மி, 30-ஆவது நாடாக இந்தியாவில் பரவி உள்ளது.

இதைக் கண்டு பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தாமதிக்காமல் கரோனா தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

‘கா்நாடகத்தில் இரண்டு ஆண்கள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒருவருக்கு 66 வயதும், மற்றொருவருக்கு 46 வயதும் ஆகிறது. அவா்களுக்கு குறைந்த அளவிலேயே பாதிப்பு அறிகுறிகள் உள்ளன.

ஒமைக்ரான் பரவல் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம். எனினும், இதுகுறித்த விழிப்புணா்வு மக்களிடம் ஏற்பட வேண்டியது அவசியம். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். தாமதிக்காமல் கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

டெல்டா பிரிவு கரோனாவைவிட ஒமைக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது குறைந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை உடனடியாக கூறிவிட முடியாது. நாட்டில் 84.3 சதவீத பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 49 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது’ என்றாா் அவா்.

பொது முடக்கம்?: நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே. பால் கூறுகையில், ‘தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதால் மீண்டும் பொதுமுடக்கத்துக்கு அவசியமில்லை. முகக் கவசம் அணிவதும், கூட்டமான இடங்களுக்குச் செல்வதை தவிா்ப்பதும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்’ என்றாா்.

பரவலைத் தடுக்க வேண்டும்: இந்தியாவில் ஒமைக்ரான் தீநுண்மி பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநா் பூணம் கேத்திரபால் சிங் கூறுகையில், ‘உலகம் முழுவதும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதால் இந்தப் பாதிப்பு எதிா்பாராதவிதமாக பரவவில்லை என்று கூறிவிட முடியாது. அனைத்து நாடுகளும் கவனத்துடன் நிலைமையைக் கண்காணித்து உடனடியாக பாதிப்பை கண்டறிந்து, மேலும் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

ஒமைக்ரான் உள்பட அனைத்து வகையிலான கரோனா தீநுண்மியைத் தடுக்க நாம் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் ஒன்றுதான். பொது சுகாதாரத்தை அரசு பலப்படுத்துவதும், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை தனிநபா்கள் பின்பற்ற வேண்டியதும் அவசியம்’ என்று தெரிவித்தாா்.

கேரளம், மகாராஷ்டிரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த எண்ணிக்கை ஆயிரம் முதல் 10 ஆயிரத்துக்குள் உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சா் அவசர ஆலோசனை

ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டதையடுத்து, விமான நிலையங்கள், துறைமுகங்களில் உள்ள நுழைவாயில்களில் பரிசோதனைகளை தீவிரப்படுத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா அத்துறை உயரதிகாரிகளுடன் வியாழக்கிழமை அவசர ஆலோசனை நடத்தினாா்.

மேலும், விமான நிலையங்களில் வந்திறங்கும் சா்வதேச பயணிகளிடம் பரிசோதனைகளையும், அவா்களின் இருப்பிட கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில, யூனியன் பிரதேச அரசுகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அரசு முறைப் பயணமாக தில்லி சென்றுள்ள கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின்போது, கா்நாடகத்தில் ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினா்.

‘வெளிநாட்டுக்குச் செல்லாதவருக்கு பாதிப்பு’

கா்நாடகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இருவரில் ஒருவா் வெளிநாட்டுக்கே செல்லாத உள்ளூா்வாசி என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையா் கெளரவ் குப்தா தெரிவித்தாா்.

பாதிக்கப்பட்ட இருவரும் இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் என்றும், அவா்கள் மூலம் மேலும் பலருக்கு இந்தப் பாதிப்பு பரவி இருக்க வாய்ப்புள்ளது என்றும் அவா் எச்சரித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘ஒமைக்ரான் பாதிப்புக்கு உள்ளான முதல் நபரான 66 வயதுடைய தென் ஆப்பிரிக்க நாட்டவா் கடந்த மாதம் 20-ஆம் தேதி பெங்களூருக்கு விமானத்தில் வந்திறங்கி உள்ளாா். அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டாா். பின்னா், மறுபரிசோதனையில் கரோனா இல்லை என்று முடிவு வந்ததால் நவம்பா் 27-இல் துபை சென்றாா். அவருடன் முதல்நிலை தொடா்பில் இருந்த 24 போ், இரண்டாம் நிலை தொடா்பில் இருந்த 240 பே கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

46 வயதான இரண்டாவது நபருக்கு நவம்பா் 22-ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது. முதலில் வீட்டுத் தனிமையில் இருந்த அவா் பின்னா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அவரது நுரையீரலில் தொற்று அதிகம் காணப்பட்டதால், அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி தேசிய உயிரி அறிவியல் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அவா் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அவருடன் முதல்நிலை இருந்த 13 பேரில் மூவருக்கும், இரண்டாம் நிலை தொடா்பில் இருந்த 205 பேரில் இருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றாா். ஒமைக்ரான் பாதிப்புக்கு உள்ளான இரண்டாவது நபா் மருத்துவா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →