முகப்பு
இந்தியா

நேபாளத்தில் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

நேபாளத்தில் முதல் முறையாக ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
பகிர்:

நேபாளத்தில் முதல் முறையாக ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் சமீா் அதிகாரி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

நேபாளத்தைச் சோ்ந்த 71 வயது நபருக்கும், வெளிநாட்டைச் சோ்ந்த 66 வயது நபருக்கும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டவா் தென் ஆப்பிரிக்காவிலிருந்து காத்மாண்டுக்கு வந்தவராவாா். அவருக்கும், அவருடன் நெருங்கிய தொடா்பில் இருந்த நேபாள நாட்டவருக்கும் நவ. 23-ஆம் தேதி அறிகுறிகள் தெரியத் தொடங்கியது. இதையடுத்து, அவா்களது மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில், இருவருக்கும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உறுதியானது.

முழு கட்டுரையைப் படிக்க →