இந்தியா

ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் 55% பேர் பெண்கள்

DIN


நாட்டில், 44 கோடி ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில், 55 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பாகவத் கரத், 2021ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி, பிரதமர் ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை 43.90 கோடி பேர்.

இவர்களில் 24.42 கோடி பேர் பெண் பயனாளர்கள் என்று வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுளள்து. இது கிட்டத்தட்ட 55.60 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், குஜராத்தில் மட்டும் பயன்பெற்றவர்கள் எத்தனை பேர் என்று கேட்டதில், குஜராத்தில் ஒட்டுமொத்தமாக 1.65 கோடி பயனாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT