இந்தியா

ஒமைக்ரான்: தில்லியில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

DIN

ஒமைக்ரான் வகை கரோனா பரவலால் நாட்டின் தலைநகரான தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தில்லியில் இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,41,449-ஆக அதிகரித்துள்ளது.

விமான நிலையங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பால் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 50,023-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 41,272 பேருக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனையும், 8,751 பேருக்கு ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனையும் செய்யப்பட்டது.

தில்லி மாநகரில் 93 பகுதிகள் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது 152 பேர் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். 376 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT