விபின் ராவத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம் 
இந்தியா

கண்ணீர் மல்க அஞ்சலி; விபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

முப்படை தலைமை தளபதி விபின் ராவத்தின் வீட்டிலிருந்து அவரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

DIN

முப்படை தலைமை தளபதி விபின் ராவத்திற்கு நாடே அஞ்சலி செலுத்திவருகிறது. 

இந்நிலையில், தில்லி கண்டோன்ட்மென்ட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா, ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தலைமை மார்ஷல் வி.ஆர். செளத்ரி, கடற்படை தலைமை அட்மிரல் ஹரி குமார் உள்ளிட்டவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, விபின் ராவத், அவரது மனைவி ஆகியோரின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் வைக்கப்பட்ட அவர்களது உடல், இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவருகிறது. இறுதி ஊர்வலத்தில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் கொலை வழக்கு: நீதிமன்றக் காவல் 15 நாட்கள் நீட்டிப்பு!

”பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்” - பகவந்த் மான்

ரவி ஒரு சகலகலா வல்லவன்! - சிவ ராஜ்குமார்

ஓராண்டை நிறைவு செய்த மூன்று முடிச்சு தொடர்!

ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்... புச்சி பாபு தொடரில் சதமடித்த ருதுராஜ்!

SCROLL FOR NEXT