இந்தியா

ஹேக் செய்யப்பட்ட பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு

DIN


பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கம் விளக்கமளித்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கம் ஞாயிற்றுக்கிழமை ஹேக் செய்யப்பட்டது. பிட்காயின் முறையை அதிகாரப்பூர்வமாக இந்தியா ஏற்றுக்கொண்டதாக பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கம் பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளித்தது. இந்த விவகாரம் ட்விட்டர் நிறுவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அது சரிசெய்யப்பட்டதாக பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. மேலும், பதிவிடப்பட்ட அனைத்துப் பதிவுகளையும் கருத்தில் கொள்ளக் கூடாது என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT