24 மணிநேரத்தில் 5 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குஜராத், கேரளம், கர்நாடகம், தில்லி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் புதியவகை கரோனாவான ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தொற்று கடந்த நவம்பர் 24-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலிருந்து திரும்புவர்கள் மூலம் பரவி வருகிறது.
அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் 4 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தில்லி யூனியன் பிரதேசத்திலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தில்லியில் புதிதாக இருவர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 24-ஆக அதிகரித்துள்ளது. இதில் 12 பேர் குணமடைந்தனர்.
குஜராத்தில் 4 பேருக்கும், கேரளத்தில் 4 பேருக்கும், கர்நாடகத்தில் 5 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் 170 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.