முகப்பு
இந்தியா

சென்னை வழியே ஆந்திரம் சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் உறுதி

சென்னை விமான நிலையத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திற்கு சென்ற வெளிநாட்டிலிருந்து வந்த பெண் பயணிக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று உறுதி புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை விமான நிலையத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திற்கு சென்ற வெளிநாட்டிலிருந்து வந்த பெண் பயணிக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று உறுதி புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

கடந்த டிசம்பர் 10ஆம் தேதி கென்யாவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த 39 வயதுடைய பெண், திருப்பதிக்கு கார் மூலம் வந்தார். அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது டிசம்பர் 12ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அவரின் மாதிரியை பரிசோதனை செய்ததில் ஒமைக்ரான் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. அவரின் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட பெண் நலமாக உள்ளார். தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

இதன்மூலம், ஆந்திரத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →