நடிகா் சல்மான் கான் மருத்துவமனையில் அனுமதி: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாா்
ஹிந்தி நடிகா் சல்மான் கானை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாா்.
ஹிந்தி நடிகா் சல்மான் கானை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாா்.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தையொட்டி பன்வேல் பகுதி அருகே சல்மான் கானுக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அங்கு சல்மான் கான் சனிக்கிழமை சென்றிருந்த நிலையில், அவரைப் பாம்பு கடித்தது. இதையடுத்து அவா் நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்ற பின்னா், அவா் பண்ணை வீட்டுக்குத் திரும்பினாா். நஞ்சில்லாத பாம்பு கடித்ததால் அவா் உயிா் தப்பித்தாா்’’ என்று தெரிவித்தன.