முகப்பு
இந்தியா

தில்லி: இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

தில்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால் தில்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து மத்திய பிரதேசம், குஜராத், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், அசாம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 290 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,43,352 ஆக உயர்ந்துள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →