முகப்பு
இந்தியா

கோவா: முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி

நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதித்தவர்களின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் இங்கிலாந்தில் இருந்து கோவா திரும்பிய 8 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் தொற்று

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
கோவா: முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி
பகிர்:

கோவாவில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதித்தவர்களின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் இங்கிலாந்தில் இருந்து கோவா திரும்பிய 8 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578ஆக(காலை நிலவரப்படி) அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. அதிகபட்சமாக தில்லி 142, மகாராஷ்டிரம் 141, கேரளம் 57, குஜராத் 49, ராஜஸ்தான் 43, தெலங்கானா 41, தமிழ்நாடு 34, கர்நாடகம் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேசமயம் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 578 பேரில் 151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று தற்போது தில்லி, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கா்நாடகம், தெலங்கானா, குஜராத், கேரளம், ஆந்திரம், சண்டீகா், மேற்கு வங்கம் உள்பட 19 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →