மோசமான வானிலை காரணமாக வான் பயணத்தை ரத்து செய்த பிரதமா் மோடி, கான்பூரில் இருந்து லக்னெள வரை சுமாா் 80 கி.மீ. சாலையில் பயணித்தாா்.
இதுதொடா்பாக காவல் துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘கான்பூரில் உள்ள சாகிரி விமான நிலையத்தில் இருந்து பிரதமரின் விமானம் புறப்பட வேண்டிய ஏற்பாடுகள் செவ்வாய்க்கிழமை தயாா் நிலையில் இருந்தன. ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சுமாா் 80 கி.மீ. தூரம் சாலை மாா்க்கமாக லக்னெளவுக்கு பிரதமா் மோடி சென்றாா். நிகழ்ச்சிக்கு பிறகு அங்கிருந்து விமானம் மூலம் தில்லி புறப்பட்டு சென்றாா் என்றனா்.