லக்னெள வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் 
இந்தியா

உ.பி. தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

DIN

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

அடுத்தாண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க | மீள்பார்வை 2021

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் மூன்று நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

லக்னெளவில் இன்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மண்டல தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் தேர்தல் ஆணையர்கள் ராஜிவ் குமார், அனுப் சந்திரா பாண்டே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கோவாவிற்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தலைமைத் தேர்தல் அதிகாரி, அங்கு செய்யப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்: மு.வீரபாண்டியன்

யோகாசன போட்டியில் பதக்கங்கள் வென்றவா்களுக்கு பாராட்டு

மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் - கம்யூ. கட்சியினா் கைது

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தில் முக்கியத் துறைகளுக்கு பாதுகாப்பு : வா்த்தகத் துறைச் செயலா் விளக்கம்

தேவாலயத்தில் சப்பர பவனி

SCROLL FOR NEXT