ம.பி: 4 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கரோனா உறுதி
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் 4 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்மணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் 4 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்மணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்தூர் விமான நிலையத்திலிருந்து துபை செல்ல இருந்த 30 வயதான பெண் பயணியிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அவர் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பல்வேறு நாடுகளில் 4 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் என்றும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக இந்தூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் புர் சிங் சேதியா தெரிவித்துள்ளார்.