இந்தியாவிடமிருந்து கரோனா தடுப்பூசி கோரும் 25 நாடுகள்: ஜெய்சங்கர்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி மருந்துகள் இதுவரை 15 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் மேலும் 25 நாடுகள் காத்திருப்பதாக மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்
அமராவதி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி மருந்துகள் இதுவரை 15 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் மேலும் 25 நாடுகள் காத்திருப்பதாக மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது பற்றி அவர் கூறுகையில், இந்தியாவிடமிருந்து கரோனா தடுப்பூசி கோரும் நாடுகள் மூன்று வகைகளாக உள்ளன. ஒன்று, ஏழை நாடுகள், தடுப்பூசியின் விலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் நாடுகள் போன்றவை.
தற்போதைய நிலையில், இந்தியா இதுவரை 15 உலக நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளது. அதேவேளையில், மேலும் 25 நாடுகள், இந்தியாவிடமிருந்து கரோனா தடுப்பூசியைப் பெறும் நடவடிக்கையின் பல்வேறு கட்டப் பணிகளில் உள்ளன.
தற்போது இந்தியா எதை செய்து முடித்திருக்கிறதோ, அதன் அடிப்படையில், உலக வரைபடத்தில் இந்தியா முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று ஒரு கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.