முகப்பு
இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கேரள காங்கிரஸ் உண்ணாவிரதம்

​பெட்ரோ, டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு கேரள காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
கேரள காங்கிரஸ் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் (கோப்புப்படம்)
பகிர்:


பெட்ரோ, டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு கேரள காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.

காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி தொடங்கி வைத்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

இதுபற்றி ராமச்சந்திரன் கூறியது:

" மத்திய அரசு பெட்ரோல் பொருள்களின் விலையை உயர்த்தி ஏழை மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்காமல் இருக்கிறது. கடந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின்போது முதல்வர் உம்மன் சாண்டி மாநில வரியைக் குறைத்தார். ஆனால், பினராயி விஜயன் அரசு அதைச் செய்யத் தவறுகிறது.

இது முன்னெடுப்புதான். மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தீர்வு காணாவிட்டால் காங்கிரஸ் கட்சி நாளை முதல் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும்." என்றார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை மத்திய அரசு திங்கள்கிழமை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →