அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
அசாம் மாநிலம் தேஸ்பூரில் புதன்கிழமை மாலை 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அசாம் மாநிலம் தேஸ்பூரில் புதன்கிழமை மாலை 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அசாம் மாநிலம் தேஸ்பூரின் வடமேற்கில் 17 கி.மீ தூரத்தில் புதன்கிழமை மாலை 5.54 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.