இந்தியா

ஜன. 6 முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமான சேவை: ஹர்தீப் சிங்

DIN

இந்தியாவிலிருந்து ஜனவரி 6-ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனிலிருந்து வந்தவர்களால் இந்தியாவில் புதிய வகை கரோனா பரவி வருவதால், இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தில்லியில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இந்தியாவிலிருந்து ஜனவரி 6-ஆம் தேதி  முதல் பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும், பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

வாரம் 30 விமானங்கள் இயக்கப்படும் என்றும், இதில் இரு நாடுகளும் தலா 15 விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த கால அட்டவணை ஜனவரி 23-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும் என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT