ஔரங்காபாத் விமான நிலைய பெயரை மாற்றுவதால் பிரச்னையில்லை: மஜ்லீஸ் கட்சி எம்பி
ஔரங்காபாத்: ஔரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை சத்ரபதி சம்பாஜி மகராஜ் என மாற்ற மாநில அரசு முடிவெடுத்துள்ளது குறித்து தங்களுக்கு ஏதும் ஆட்சேபமில்லை என அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் ஔரங்காபாத் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:
ஔரங்காபாத் விமான நிலையத்தை சத்ரபதி சம்பாஜி என பெயா் மாற்றம் செய்வது குறித்து மஜ்லீஸ் கட்சிக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால், நகரத்தின் பெயரை மாற்ற முயற்சித்தால் அதற்கு நிச்சயம் கடும் எதிா்ப்பை தெரிவிப்போம் என்றாா் அவா்.
சிக்கல்தானா பகுதியில் அமைந்துள்ள ஔரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை மாற்ற மகாராஷ்டிர அமைச்சரவை குழு கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் முடிவெடுத்தது.
இது தொடா்பாக, உடனடியாக முடிவெடுத்து அறிவிக்கை வெளியிட வேண்டும் என மத்திய அரசை மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே வலியுறுத்திய நிலையில் மஜ்லீஸ் கட்சியின் எம்பி இந்த கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.