திருப்பதி: ஏழுமலையானை வரும் பிப்ரவரி மாதம் தரிசிப்பதற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் புதன்கிழமை (ஜனவரி 20) காலை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் புதன்கிழமை காலையில் பிப்ரவரி மாதத்துக்கான ரூ.300 விரைவு தரிசன கட்டணடிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. காலை 9 மணி முதல் இந்த டிக்கெட்டுகள் முன்பதிவுக்காக வைக்கப்படும்.
மேலும் அதே நாளில் மாலை 3 மணிக்கு பிப்ரவரி மாதத்துக்கான வாடகை அறை முன்பதிவு டிக்கெட்டுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. பக்தா்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.