எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு குடிநீர், கழிவறை வசதி: சிசோடியா
தில்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உறுதியளித்துள்ளார்.
தில்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உறுதியளித்துள்ளார்.
தில்லி - உத்தரப் பிரதேச எல்லையான திக்ரி, காஜிப்பூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அப்புறப்படுத்தும் வகையில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு தடை விதித்த நிலையில், சிசோடியா இவ்வாறு அறிவித்துள்ளார்.
தில்லி - உத்தரப் பிரதேச எல்லையான காஜிப்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''காஜிப்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அந்த ஏற்பாடுகளை இன்று (ஜன.29) நேரில் பார்வையிட்டேன்.
மேலும் தில்லி எல்லைகளில் போராடும் அனைத்து விவசாயிகளுக்கும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்'' என்று கூறினார்.