முகப்பு
இந்தியா

எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு குடிநீர் நிறுத்திய காவல்துறை

எல்லையில் போராடும் விவசாயிகளுக்கான குடிநீர் கொண்டுசெல்லும் டேங்கர் லாரிகளுக்கு தில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு குடிநீர் நிறுத்திய காவல்துறை (கோப்புப்படம்)
பகிர்:

எல்லையில் போராடும் விவசாயிகளுக்கான குடிநீர் கொண்டுசெல்லும் டேங்கர் லாரிகளுக்கு தில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

தில்லி சிங்கு எல்லையில் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிராக அப்பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் வெளியேற காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. சினங்கு எல்லையிலிருந்த விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டீஸையும் காவல்துறையினர் வழங்கினர்.

சிங்கு எல்லையுடனான தொடர்பை துண்டிக்கும் விதமாக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் காவல்துறையினர் குழி தோண்டினர்.

இதனிடையே சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் டேங்கர் லாரிகளுக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 64-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →